திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரை விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஜூலை, 2010

தில்லாலங்கடி – திரைப்பட விமர்சனம்

Thillalangadi Movie Review


தயாரிப்பு - எடிட்டர் மோஹன், கலாநிதி மாறன்

இயக்கம் - ஜெயம் ராஜா

நடிப்பு - ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு, சந்தானம், மன்சூர் அலிகான், பிரபு, லிவிங்ஸ்டன், தியாகு மற்றும் பலர்

இசை - யுவன் சங்கர் ராஜா

பாடல்கள் - வாலி, நா.முத்துகுமார், விவேகா

ஒளிப்பதிவு - ராஜசேகர்

எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் ‘கிக்கு’ அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா(ஜெயம் ரவி).

தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்வதுதான் தில்லாலங்கடி.

இந்தத் தில்லாலங்கடி வேலைகள் அவர் செய்யும் இரண்டு முக்கியமான விஷயங்களிளும் தொடர்கிறது. ஒன்று மற்றவர்களுக்காக சமுதாயத்தில் அவர் செய்யும் பணி. மற்றொன்று நிஷாவுடன் (தமன்னா) அவர் செய்யும் காதல் பணி.

தன் தங்கை ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை பற்றி தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள் காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால் ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா, கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.

காதலியின் பிரிவிற்கு பிறகு ரவி ஒரு மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் காட்டப்பட, அவரைத் தேடி போலீஸ் ஆபிஸர் கிருஷ்ண குமார்(ஷாம்) அலைகிறார். மலேசியாவில், நிஷா(தமன்னா)வும் போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமாரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.

தான் ஒருவனைக் காதலித்ததாகவும் அவன் பெரிய தில்லாலங்கடி என்றும் அவன் பல பொய்களை சொன்னதால் அந்த காதலை கைவிட்டதாகவும் சொல்கிறார் நிஷா.
இந்தக் கதை தெரிந்ததும் சைக்கிள் கேப்பில் தன்னுடைய காதலை நிஷாவிடம் போட்டு உடைக்கிறார் கிருஷ்ண குமார் . அதுமட்டும் இல்லாது, முக்கிய அரசியல் புள்ளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்து தில்லாலங்கடி வேலை செய்யும் திருடனை கண்டுபிடிக்க மலேசியா வந்த அவசியத்தையும் சொல்கிறார்.
பிறகு தான் இரண்டு தில்லாலங்கடியும் ஒருவனே என தெரிகிறது.
விசாரிப்பில் ஹீரோ கொள்ளையடித்த பணத்தை எல்லாம் ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவிற்குத் தான் பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவர ஹீரோ ஜெயம் ரவி நல்லவராகிறார். தன்னொடு திருமணம் நிச்சயமான ஷாமை கழற்றி விட்டு ஜெயம் ரவியை கைப்பிடிக்கிறார் ஹீரோயின் தமன்னா.

ரசிகர்களின் விசில் சத்தங்களை அதிகம் அள்ளிக் கொள்பவர் வடிவேலு. ஜெயம் ரவியின் தில்லாலங்கடி வேலைகளில் மாட்டிக்கொண்டு ரகளை செய்கிறார். ஜாக்கி என்கிற ஜாக்ஸனாக வரும் வடிவேலு காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் தமன்னாவோடு ‘என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்…’ என டூயட் பாடுவது அபாரம்.

படத்தில் அடுத்து ஸ்கோர் பண்ணியிருப்பது ‘இளமை இசை’ யுவன் ஷங்கர் ராஜா. படத்தை மட்டும் இல்லாது பாடல்களையும் தெலுங்கு படத்திலிருந்து போட்டோ காப்பி எடுப்பார் ரீமேக் ராஜா.

ஆனால், இந்தப் படத்தில் தான் பாடல் காட்சிகளில் கொஞ்சம் மற்றங்கள் செய்துள்ளார். அதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜா தான். சிம்பு பாடியிருக்கும் ‘பட்டு பட்டு பட்டம் பூச்சி’ பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.

பொதுவாகவே ரீமேக் படங்களை எடுக்கும் ராஜா, ரிஸ்க் இல்லாமல் சின்ன கதாப்பாத்திரத்தில் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைப்பார். அது போல இந்தப் படத்திலும் பிரபு, சுஹாசினி, ராதாராவி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், மனோபாலா என நடிகர் பட்டாளமே உள்ளது.

படத்தை ஒரு கிக்குக்காக பார்க்கலாம்

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 17 மே, 2010

Sura Movie Review - சுறா திரை விமர்சனம்

Sura Movie Review

Expectations were great, grand and splendid for 'Sura'. This being Vijay's 50th film and it brings together Vijay, Tamannah and Vadivelu for the first time. Directed by S P Rajakumar, 'Sura' as the title suggests is a movie that is set in a fishing hamlet and the actor playing a good Samaritan to usher welfare in the lives of fisher folk.
A movie which underlines the political aspirations and ambitions of Vijay is a big one for his fans for he is achieving a milestone - completing his golden jubilee movie. A mass hero known for his big box office collections, the actor has a known path that he traverses in the recent times. 'Sura' too is no different. He is literally the one-man army who romances, fights, tries humour and challenges the baddie only to emerge triumphant in the end.
Interestingly, the actor has this time chosen to join hands with S P Rajakumar who has made a name for himself doing comedy films and that too with Vadivelu in the team. The trio has ensured that it is a light-hearted fare, right from the word go with enough thrills and spills.
'Sura' is a story that is set in Yaazh Nagar, a fishermen hamlet in coastal Tamil Nadu. The name of the place has a lot of political significance with the recent political turmoil over the ethnic strife in the neighbouring Sri Lanka. Sura (Vijay) is born and brought up here and he is obviously the darling of the masses in the area.
He, in the company of his friend (Vadivelu), who is another fisher folk, brings the roof down in laughter. Their one-liners are hilarious. Meanwhile, our hero comes across young bubbly Poornima (Tamannah) who chooses to end her life unable to cope with the death of her pet dog.
Slowly, as expected she gets attracted towards Sura thanks to his good deeds. Finally romance blossoms between them. When things seem to go well, trouble enters in the form of a greedy and corrupt Minister Samuthira Raja (Dev Gill). He wants to usurp the land where these fishermen live. His attempts to take away the wealth is resisted by Sura. They cross swords with each other.
The Minister hatches a conspiracy to bump off Sura with the help of his Ministerial post and authority and unleashes cops against him. But a man of guts and determination, he takes on them single-handedly. Who emerges the winner is the climax? Please watch the movie for the answer!
Vijay is as usual cool, bubbly and enthusiastic. He is energetic and a livewire on screen. He seems to have begun from where he left in 'Vettaikkaran'. He utters punch lines with indirect thrust on his political aspirations. However at many places, the actor reminds his earlier films from 'Pokkiri' to 'Kuruvi' to 'Vettaikkaran'. Tamannah is as usual cool and bubbly. She appears right there to romance and to dance for a couple of songs on screen.
Vadivelu is a real scene stealer as ‘Umbrella’. His body language, one-liners, punch lines and wits evoke instant laughter. He seems to share a good chemistry with Vijay. Riyaz Khan, Ilavarasu among others do their part well. The movie’s baddie in Dev Gill wins all accolades. He is menacing all through.
Mani Sharma knows the pulse and taste of Vijay-fans as he has loaded the film with tracks that are racy and riveting from the word go. Produced by Sangili Murugan and presented by Sun Pictures, the movie is more targeted at Vijay fans and has scenes to appease them.
Thanks - indiaglitz.com

சுறா திரை விமர்சனம்


நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்

எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

நன்றி - oneindia.in

மறக்காம வோட்டுப் போடுங்க



ஞாயிறு, 7 மார்ச், 2010

Vinnai Thandi Varuvaya Movie Review

விண்ணைத் தாண்டி வருவாயா- பட விமர்சனம்

நடிகர்கள்: த்ரிஷா, சிலம்பரசன், கணேஷ்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா
எடிட்டிங்: ஆன்டனி
இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட்' மூவீஸ்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பிஆர்ஓ: நிகில் முருகன்

மனம் லயித்து, கண்ணோரங்கள் கசிய இளமையின் அற்புதமான தருணங்களை உணர்ந்து ரசிக்க ஒரு அழகிய காதல் படம் தந்த கௌதம் மேனனுக்கு முதலிலேயே பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்!

இந்தப் படம் குறைகளே இல்லாத படமல்ல.. குறைகள் இருக்கின்றன, மனதுக்குப் பிடித்தவளின் முகத்தில் அரிதாய் அரும்பும் பருக்கள் போல...! ஆனால் காதலில் விழுகிறவனுக்கு அவை பருக்களல்ல.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத கிளர்ச்சி தரும் அழகிய அடையாளங்கள்! அப்படித்தான் இந்தப் படத்தின் குறைகளும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

ஏன் எப்படி என்றெல்லாம் யோசிக்கக் கூட அவகாசமில்லாத ஒரு நாளில், காற்றில் கூந்தல் அலைய தேவதையாய் வரும் த்ரிஷாவை முதலில் பார்க்கிறார் சிம்பு [^]. அந்த வயதில் நடக்கும் ரசவாத மாற்றம் அவருக்குள்ளும். காதலில் விழுகிறார்!

முதலில் மறுத்து, மழுப்பி, நட்பாகி, நட்பின் எல்லை மீறக்கூடாது என்று தெரிந்தே பொய் சத்தியங்களைச் செய்து, பின் அதை உடைத்து உதடு வழியாக இதயம் பரிமாறுகிறார்கள் இருவரும்.

வழக்கம் போல மதமும் இனமும் இந்தக் காதலிலும் குறுக்கிட, அதை ஜஸ்ட் லைக் தட் உடைக்கிறது காதல்.

ஆனால் மனங்களின் பிணக்கை உடைக்க முடியாமல் தோல்விப் பாதையில் திரும்புகிறது. காதலர்கள் பிரிகிறார்கள்... மீண்டும் இணைகிறார்களா என்பதை சின்ன வித்தியாசத்துடன், ஆனால் சற்றே குழப்பமான க்ளைமாக்ஸுடன் சொல்லியிருக்கிறார் கௌதம் மேனன்.

மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமா மீது மோகம் கொண்டு அலையும் இளைஞனாக வரும் தமிழ்ப் பையன் சிம்புவுக்கும், பொலாரிஸில் பணியாற்றும் ஹை மிடில்கிளாஸ் மலையாளியான த்ரிஷாவுக்கும் காதல் அரும்பும் கணங்கள், சூழல், அவர்களின் நெருக்கம், விலகல், பிணக்கு, இணக்கம்... என உணர்வுகளை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

இந்தக் கதைக்கு அட்டகாசமாகப் பொருந்துகிறார் சிம்பு. இந்த வெற்றி அவரை மீண்டும் குரங்காட்டம் போட வைக்காமலிருந்தால், இன்னும் சில நல்ல படங்கள் ரசிகர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

த்ரிஷா ஆரம்பத்தில் சுமாராகத் தெரிந்தாலும், முடிவு நெருங்க நெருங்க நமக்குள் ஒருவராகவே மாறிப் போகிறார். தனது பாத்திரத்தை அத்தனை அழகாக உணர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக அவரது புதிரான குணத்தை அவர் வெளிப்படுத்தும் விதம்... எதற்காக அத்தனை நெருக்கம்... ஏன் அந்த திடீர் விலகல்?.

ஏஆர் ரஹ்மான்- கௌதம் மேனன் கூட்டணி எடுத்த எடுப்பிலேயே இதயங்களைக் கொள்ளை கொள்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் புதிய வர்ணத்தையும், வார்த்தைகளால் சொல்ல முடியாத உற்சாகத்தையும் வாரி இறைக்கிறது ரஹ்மானின் இசை.

'மன்னிப்பாயா...' பாடலில் திருக்குறளை ரஹ்மான் மிக்ஸ் செய்திருக்கும் அழகுக்கே இன்னொரு ஆஸ்கார் தரலாம்.

ஓமணப் பெண்ணே, ஹோசன்னா பாடல்கள் இந்த ஆண்டின் இளமை கீதங்கள்.

சிம்புவுக்கு நண்பராக வரும் கணேஷ் சுவாரஸ்யமான பாத்திரம். நகைச்சுவை இல்லாத குறையை சரிசெய்கிறார்.

மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவும், ராஜீவனின் கலை நேர்த்தியும் சிறப்பு. இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளை இன்னும்கூட ஷார்ப்பாக்கியிருக்கலாம் எடிட்டர் ஆண்டனி.

அழகான விருந்தில் அசிங்கத்தை வைத்த மாதிரி, அந்த கெட்ட வார்த்தை காட்சிகள். கௌதம் மேனன் தன் படத்தில் தேம்ஸைக் காட்டினாலும், வாயிலிருந்து வரும் கூவத்துக்கு சுய சென்சார் செய்துகொள்வது அவசியம்.

திரும்பத் திரும்ப ஒரே வசனத்தை சொல்வது எரிச்சல். எது நிஜ க்ளாமாக்ஸ், எது சினிமாவுக்குள் வரும் சினிமா க்ளைமாக்ஸ் என்பதில் முதலில் சற்று குழப்பம் ஏற்படத்தான் செய்கிறது.

ஆனாலும்... காதலைப் பக்கம் பக்கமாக பேசுவதை விட, உணர்ந்து ரசிப்பதுதான் உன்னதமான உணர்வுகளைத் தரும். அந்த உணர்வுகளை அனுபவிக்க ஒருமுறை இந்தப் படம் பார்க்கலாம்!

நன்றி thatstamil.oneindia.in

Vinnai Thandi Varuvaya Movie Review


Problems created by lovers among themselves are one thing while problems created by others to these lovers are another thing. But what happens if both these takes place in a romance. Simbhu frequently asks,” Why should I love Jessie when there are so many other girls”. This question may be asked by many youngsters or their friends in real life. The amazing romance, confusions and the pain has been narrated in a beautiful way.

Simbhu dons the role of Karthik. He who completes engineering aspires to become an assistant film director. Simbhu goes as a tenant to a house whose owner is the father of the Malayalee girl Jessie. Trisha who dons the role of Jessie works in Infosys. Karthik seeing Jessie loses his heart to her. At one point he decides that his love will not work out and tries to at least try to become a friend of Jessie. This friendship ultimately turns out to be love. But Jessie gets scared and confused about her parents. She confuses Karthik also and finally deiced to settle with the person arranged by her family. Whether Karthi and Jessie reunite is the rest of the story to be seen on the silver screen.

Simbhu as Karthik is not a boy who can show tricks by hand. His maturity can be well seen in this film. Let it be when he falls in instant love with Jessie or the way he wanders to make his love a success are really captivating. In a scene he follows Jessie to KFC. When he comes near Jessie, she asks whether he was following her. He in turn says that she is following him. Jessie says her office is here. He in turn says that KFC is also here. He watches Jessie walking. When the salesman asks for order, Simbhu asks the bearer not to disturb him because he wants to watch her until he goes. He is almost the mouth piece of today youngsters. His voice modulation is really superb. He captivates the hearts of the audience when he speaks to Jessie about her saying that there is a girl in his heart. This film has taken Simbhu to another phase in his career.

Trisha is cute and exceptionally captured the hearts of the audience. Her mischievous look and her body language are really incredible. In some of the sequences it can visibly seen that there were stiff competition where Simbhu and Trisha are in dialogues in the climax sequences.The dialogues in the film are very realistic and Gowtham has given Simbhu a good scope to bring out his hidden acting talents.

There is no need to speak much about A R Rahman’s music. The songs of this film have already become popular. The lead guitar right from the beginning journeys throughout the film with us. The songs Omana Penne and Hosanna are fantastic. Rahman has once again ruled his dynasty with elegance. It definitely makes one to hum the songs while coming out of the theatres.

There are no words to describe the camera work of Manoj. He had earlier shown his coolness in the film Eeram. He had excelled in this film.

On the whole Gowtham Vasudev Menon has given a cute and sweet musical romantic film.

Thanks to tamilomovie.com

விண்ணைத் தாண்டி வருவாயா குழுவுக்கு ரஜினி பாராட்டு!

விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரஜினிக்காக சிறப்புக் காட்சி போட்டிருக்கிறார்கள். படம் பார்த்த ரஜினி, படக்குழுவினர், நடிகர் நடிகைகள் எல்லோராயும் வாயார வாழ்த்தியுள்ளார்.

பின்னர் மறக்காமல் கேட்டது படத்தில் 'காக்க காக்க கேமராமேன்' பாத்திரத்தில் வரும் கணேஷை. 'எங்கே அந்த காக்க காக்க கேமராமேன்... கூப்பிடுங்க அவரை..." என்றாராம். உண்மையில் காக்க காக்க படத்துக்கு கேமராமேன் ஆர்டி ராஜசேகர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக கணேஷுக்கு அப்படி ஒரு வேடம் கொடுத்ததை ரஜினிக்கு சொல்ல, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்.." என்று வாயாற பாராட்டினாராம்!

இதுபற்றி இயக்குநர் கவுதம் மேனன் கூறுகையில், "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்... இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமா விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்" என்றார்.

மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails