ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

படத்துக்குப்படம் காதலிகளை மாற்றும் நடிகர்

ஆயிரத்தில் ஒருவனாக வந்து, சிறுவனாக அவதரித்து நான் அவதாரம் அல்ல என்று சொன்ன நடிகர் படத்துக்குப்படம் காதலிகளை மாற்றிக் கொண்டேயுள்ளாராம்.

முதலில் தமன நடிகையுடன் காதல் என்று கிசுகிசு வந்தது. இப்போது கண் மை பெயரில் இருக்கும் நடிகையுடன் காதலாம்.

இதற்கு என்ன காரணமென்று விசாரித்தால் தன் படங்கள் ஓடுவதற்கு பப்ளிசிட்டிக்காகவாம். படத்தின் கதை, இசை, இயக்கம், இவரின் நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தால் படம் தானே ஓடி விட்டுப் போகிறது. இதோடு அவர் தந்தையைப் பற்றி அவர் காலத்தில் அவரைப் பற்றி ஒரு கிசுகிசு கூட வந்தது கிடையாதாம். இப்படியெல்லாம் சீப் பப்ளிசிட்டி தேவையா?

மறக்காம வோட்டுப் போடுங்க



செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் நடிகை!

சினிமாத் துறையினர் ஹாலிவுட் கதைகளைத்தான் காப்பியடிக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் கலாச்சாரத்தையும் காப்பியடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் ஒன்றுதான் தாலி கட்டிக்கொள்ளாமலேயே கணவன் – மனைவியாக வாழும் கலாச்சாரம். இது சமீப காலமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வேகமாக பரவி வருகிறது என்பதற்கு சாட்சிதான் இந்த செய்தி.

தமிழில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகையாக சித்தரிக்கப்பட்ட பிரியமான பெல் நடிகை, பின்னர் சொந்தக்குரலில் பேசி, கிராமத்து பெண்ணாக நடித்ததால் தேசிய விருது பெரும் அளவுக்கு உயர்ந்தார். அதன் பிறகு அவர் தமிழில் என்ன்னென்னவோ செய்தும் அவர் நடித்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கியவர் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகனுடன் காதல் கொண்டார். இப்போது அந்த காதல் கனிந்து கசிந்துருகி, இருவரும் கணவன் – மனைவி போல, ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிற அளவுக்கு முன்னேறியிருக்கிறதாம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழன் இப்படி இறக்குமதியாகும் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்வான்.

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கண்களை தானம் செய்கிறார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யாராய் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஆவார். மேலும் அவர் உலக அழகி பட்டமும் வென்றுள்ளார்.

ஐஸ்வர்யாராய் இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக தன் கண்களை தானம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

இது பற்றி ஐஸ்வர்யா ராய் கூறுகையில் மக்கள் என்னைப்பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது எனது கண்கள். எனவேதான் இந்த கண்ணை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.

மறக்காம வோட்டுப் போடுங்க



திங்கள், 9 ஆகஸ்ட், 2010

விழுந்து விழுந்து உபசரிக்கும் நடிகை

மும்பையில் இருந்து புதிதாக இறக்குமதியான ஹ_சி_ நடிகை நடிகர்கள், இயக்குனர்கள், பட அதிபர்கள் என எல்லோரையும் விழுந்து விழுந்து உபசரிக்கிறாராம்.

ஆகவே உச்சத்தில் உள்ள _சின், த்ரி_, நய__ரா போன்ற நடிகைகள் கலக்கத்தில் உள்ளதாகவும், தாங்களும் அது போலவே உபசரிக்கலாமா என ஆலோசனை செய்து வருவதாகவும் கோடம்பாக்கம் செய்திகள் கூறுகின்றன.

மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails